Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது சக மருத்துவர்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படுத்த நான் இன்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தடுப்பூசியைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் அதை போட்டுக்கொள்வதில் தயக்கம் உள்ளது. அப்படி தயக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் உட்பட மருத்துவ முன்னோடிகள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
பிற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து தடுப்பூசி போடப்படும் எனவும், மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.